உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

நெய்வேலியில் மனு கொடுத்தாலும் விசாரணை நடத்தாத மகளிர் காவல் நிலையம்!



நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையம்.
நெய்வேலி:
 
             நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போதிய போலீசார் இல்லாததால் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது விசாரணை செய்வதில் தாமதம் நீடிக்கிறது.நெய்வேலி வட்டம் 19-ல் நெய்வேலி அனைத்து மகளிர் காவல்நிலையம் உள்ளது. இக்காவல் நிலையத்தில் தற்போது ஒரு உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், 2 தலைமைக் காவலர்கள் மட்டுமே உள்ளனர். 
 
               ஆனால் இக்காவல் நிலையத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளோ அதிகமாக உள்ளன. குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, வடலூர், நெய்வேலி, மந்தாரக்குப்பம் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்குதான் புகார் அளிக்க வேண்டும்.இங்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் புகார் மனுவைக் கொடுத்துவிட்டு மாதக் கணக்கில் விசாரணைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.காவல் நிலையத்தில் மொத்தம் 4 பேர் உள்ள நிலையில் ஒரு தலைமைக் காவலர் நீதிமன்றப் பணிக்காக செல்ல வேண்டியுள்ளது. மேலும் ஒரு காவலர் எழுத்தர் பணியை பார்க்க வேண்டியுள்ளது. 
 
             புகார் மனு மீது விசாரணை செய்யும் உதவி ஆய்வாளர், புகாருக்கு உள்ளான நபரை அழைத்து வர போதிய போலீஸôர் இல்லாமல் திண்டாட்டத்துக்கு ஆளாகிறார். மேலும் சில நாள்களில்,போலீஸôர் பாதுகாப்புப் பணி என்ற பெயரில் வெளியூருக்கு சென்றுவிடுவதால், புகார் அளிக்கவரும் பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.இக்காவல் நிலையத்துக்கு என்று தனி வாகனமும் இல்லை. இதனால் குற்றம்சாட்ட நபரை அழைத்து வர ஆட்டோவையே நம்பி இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
                     தற்போது இக்காவல் நிலையத்துக்கு என்று மாற்றம் செய்யப்பட்ட பெண் காவலர் ஒருவர், நெய்வேலி வட்டம் 8-ல் உள்ள காவல் நிலையத்தில் தான் பணிபுரிவேன் என்று கூறி அங்கு பணி புரிந்து வருகிறாராம்.இதனால் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்ற இரு பெண் காவலர்களும், "இரவு பகல் பாராமல் பணி செய்ய வேண்டியிருக்கிறது. எங்களுக்கு என்று குடும்பம், பிள்ளைகள் உள்ளனர். அவர்களை எப்போது நாங்கள் கவனிப்பது' என்று வேதனையுடன் கூறுகின்றனர். உறுதுணையாக பணிபுரியும் போதிய காவலர்கள் இன்றி அவதியுறும் பெண் காவலர்களின் நிலையையும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுவை விரைந்து விசாரணை நடத்தவும்  எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior