உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

விருத்தாசலம்: 

             கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூர் கிராமத்தில் குளம் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றினர்.

          விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூரில் இருந்த இரண்டரை ஏக்கர் பரப்பளவு குளத்தின் ஒரு பகுதியை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து கரும்பு மற்றும் உளுந்து பயிரிட்டு வந்தார். அதேப்போல் 2 ஏக்கர் 36 சென்ட் பரப்பளவு கொண்ட மற்றொரு குளத்தையும் தனி நபர் ஆக்கிரமித்து நெல் பயிரிட்டும், சுடுகாட்டு இடத்தை ஒருவரும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் கேசவபெருமாள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை வைத்தார்.

               இதனையடுத்து தாசில்தார் ஜெயராமன் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, ஆர்.ஐ., செல்வியம்மாள், பி.டி.ஓ., புஷ்பராஜ், வி.ஏ.ஓ., மதியழகன், ஜெயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் இடத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதரன், திருமால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior