உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

மின் இணைப்பு துண்டிப்பு என்.எல்.சி. நகர அலுவலகம் முற்றுகை

கடலூர்: 

            மின்சாரம் துண்டித்ததைக் கண்டித்து பொதுமக்கள் என்.எல்.சி., நகர நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

              நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள ஐ.டி.ஐ., நகர், எம்.ஜி. ஆர்., நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட ஐந்து நகர்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு முறையான அனுமதி பெறாமல் மின் இணைப்பு பெற்றிருப்பதாகக் கூறி நேற்று முன்தினம் என்.எல்.சி., நிர்வாகம் மின் இணைப்புகளை துண்டித்தது. இதனைக் கண்டித்தும், உடனடியாக மின் இணைப்பு வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 11.30 மணி அளவில் நெய்வேலி 11ம் வட்டத் தில் உள்ள என்.எல்.சி., நகர நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் என். எல்.சி., நகர நிர்வாகத்தின் தலைமை பொது மேலாளர் செந்தமிழ்செல் வன் நாளை (இன்று) மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று பகல் 2 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior