உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

கடலூரில் போதை எதிர்ப்பு மனித சங்கிலி

கடலூர்: 

                உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி கடலூரில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதை எதிர்ப்பு மனித சங்கலி நடந்தது. கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரட்சகர் முன்னிலை வகித்தார். 

               செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற போதை எதிர்ப்பு மனித சங்கிலியை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் சேர்மன் தங்கராசு, துணை சேர்மன் தாமரைச்செல்வன், மாவட்ட திட்ட மேலாளர் கலைமதி, சென்ட்ரல் ரோட்டரி சங்க சண்முகம் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மனித சங்கிலியில் பங்கேற்ற கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான கோஷம் எழுப்பினர். மேலாளர் கதிரவன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior