உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

என் ஊரில் என் அனுபவம்

          
                கடந்த சனிக்கிழமை (03/07/210) அன்று சொந்த வேலை காரணமாக கடலூருக்கு வந்திருந்தேன்.

1 . கடலூர் பழைய அண்ணா பாலத்தில்

               நீண்ட நாட்களுக்கு பிறகு கடலூர் பழைய அண்ணா பாலத்தில் நடந்து செல்லும்  வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் படிக்கும் பொது வகுப்பை கட் அடித்துவிட்டு வந்து  இந்த பாலத்தில்தான் என் நண்பர்களோடு பெரும்பாலான நாட்களை கழித்து இருக்கிறேன். . . அந்த நாட்களில் அங்கே அன்னாசி பழம் விற்கும், கையில் இருக்கும் காசுக்களைஅந்த அன்னாசிபழங்களை வாங்கி சாப்பிடுவோம். அனால் இப்போது அந்த கடைகளை அங்கே காணவில்லை. அந்த நாட்கள் என் கண்முன்னே வந்து சென்றது.........

2 . பழைய புத்தக கடை

             அங்கே என் கணினி அறிவை வளர்த்த ஒரு பழைய புத்தக கடை ( இந்த கடையில் தான் முதன் முதலாக  நான் கம்ப்யூட்டர் உலகம் என்ற புத்தகத்தினை பாதிவிலைக்கு வாங்கினேன், இங்கேதான் என் கணினி புத்தகம் படிக்கும் பயணம் தொடங்கியது ) தற்போது தன் கடைக்கு  பெயர் பலகை வைத்து சற்று முன்னேறி இருக்கிறார். அவருக்கு என் நன்றியினை இங்கே சொல்லி கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி. 

3. பிச்சாவரம் சுற்றுலா மையம்

             முதன் முதலாக சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இயற்கையின் அழகான படைப்பு நம் ஊரில் என்ற பெருமை பட்டுக்கொண்டேன். நம் மாவட்டத்தின் இந்த சிறப்பையும் நாம் இழக்கும் நிலையில் இருக்கிறோம் என்பதை எங்கே சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் அங்கே பராமரிப்பு நன்றாக இருந்தாலும் அங்கே வைத்துள்ள அரசாங்க எச்சரிக்கை பலகை எனக்கு வியப்பாக இருந்தது. தனியார் படகில் உலா வந்து ஏதேனும் உயிர் இழப்பு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பில்லை......என்ற வரி தான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தமிழக சுற்றுலாதுறையின் கீழ் இயங்கும் இச்சற்றுலா மையத்தில், தனியார் படகு எப்படி வந்தது என்றே தெரியவில்லை.. மேலும் தொலை நோக்கி வழியாக பிச்சாவரம் கடற்கரையை பார்க்கலாம் என்று சொன்னார்கள்,  நம்பி போய் பார்த்தேன் ஏமாற்றம்தான் மிச்சம், அதற்கு ஐந்து ருபாய் கட்டணம், வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் இல்லாதது கொஞ்சம் நன்றாக இருந்தது.

4 . கிள்ளை ரயில்வே நிலையம்

            கிள்ளை ரயில்வே நிலையத்தில் வைத்திருந்த ஊர் பெயரை காட்டும் பெயர் பலகையில் கிள்ளை (KILLAI) என்று இருக்க வேண்டிய ஆங்கில சொல் கில்லே (KILLE) என்று இருக்கிறது. ஒரு வேலை ஆங்கிலேயர் காலத்து சொல்லோ, இந்த மாதிரி (KILLE)  என்று மூன்று இடங்களில் எழுதப்பட்டு இருக்கிறது. கொஞ்சம் யாராச்சும் கவனிச்சு சொல்லுங்கப்பா, திருத்தம்  வந்தால் எனக்கு தெரியபடுத்தவும்.

5 .  சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரி 

  இங்கே வைத்துள்ள கல்லூரியின் பெயர்ப்பலகை அநேகமாக கல்லூரி ஆரம்பித்த காலத்தில் வைக்க பட்டது என்று நினைக்கிறேன். பெயர்ப்பலகையினை கொஞ்சம் புதிதாக எழுதி வர்ணம் பூசக்கூடதா? 

6 . பி. முட்லூர் - சிதம்பரம் பாலம் 

         இந்தப்பாலம் கடலூரில் இருந்து பி முட்லூர் வழியாக சிதம்பரம் செல்லும் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு என் நன்றியினை  தெரிவித்து கொள்கிறேன்.

7 . கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை

           இன்னும் மாறாத அந்த மூக்கை துளைக்கும் நாற்றங்கள். இதற்கு முடிவு எப்போது என்றே தெரியவில்லை, இங்கே புதிதாக பிரமாண்டமாய் கட்டப்பட்டு வரும் கெம் பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தினை கண்டு வியந்தேன். சிப்காட் வரவேற்பு பலகை அருகே கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பைகளுக்கு விடிவுகாலம் எப்போது?

8 . ஜாய் அலுகாஸ் நகை கடை 

        கடலூரில் லாரென்ஸ் சாலையில் பிரமாண்டமாய் ஜாய் அலுகாஸ் நகை கடை, நம்ம ஊரு மின்சாரம் இங்கே உள்ள குளிர் சாதன பெட்டிகளுக்கு பயன்படுத்துவதை கொஞ்சம் குறைத்தால் ன்றாக இருக்கும்.


குறிப்பு: இங்கே எழுதபட்டுள்ள வரிகள் அனைத்தும் யார் மனதையும்  புண் படுத்தாமல் என் அனுபவ வரிகள்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior