உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

நெய்வேலியில் 13-வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது



நெய்வேலியில் வெள்ளிக்கிழமை துவங்கிய 13-வது புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்து, புத்தகங்களை பார்வையிடும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா (வலது)

நெய்வேலி:

              நெய்வேலி 13-வது புத்தகக் கண்காட்சியை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி முன்னிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

              இந்திய அளவில் சென்னை, கொல்கத்தா, புதுதில்லி புத்தகக் கண்காட்சிகளுக்கு அடுத்தபடியாக திகழும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள இப்புத்தகக் கண்காட்சியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தொடங்கி வைத்தார்.கண்காட்சியைத் திறந்துவைத்த அவர் கண்காட்சி அரங்கினுள் மக்களோடு மக்களாக சென்று புத்தகக் கடைகளை பார்வையிட்டார். உடன் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி, இயக்குநர்கள் பாபுராவ், கந்தசாமி, சேகர் உள்ளிட்டோர் சென்றனர்.

               இதையடுத்து லிக்னைட் ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தலைமை வகித்தார். இதைத்தொடர்ந்து தினம் எழுத்தாளர் கெüரவிக்கப்படும் வரிசையில் முதல் நாளான வெள்ளிக்கிழமை காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியர் மு.சாயயு மரைக்காயர் கெüரவிக்கப்பட்டார். எஸ்.சந்த் கம்பெனி லிட். எனும் பதிப்பாளர் கௌரவிக்கப்பட்டார். முன்னணி எழுத்தாளர் ரா.சண்முகம் எழுதிய வாழ்க்கைப் பிரச்னைகள் எனும் நூலை நீதிபதி கே.என்.பாஷா வெளியிட அதன் முதல் பிரதியை என்எல்சி தலைவர் எ.ஆர்.அன்சாரி பெற்றுக்கொண்டார். இதையடுத்து நடந்த கலை, இலக்கிய நிகழ்ச்சியில் கோவை மதி சாரதா குழுவினரின் பாட்டு மன்றம் நடைபெற்றது. ஜூலை 9-ல் தொடங்கி 18-ம் தேதிவரை தொடர்ந்து 10 தினங்களுக்கு புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior