உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

கடலூர் முதுநகர் அருகே ஆசிட் டேங்கரை சுத்தம் செய்ய முயன்ற டிரைவர், கிளீனரை விஷவாயு தாக்கியது

கடலூர் : 

            ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற கிளீனர் மற்றும் டிரைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

             திருநெல்வேலி மாவட்டம் உக்கிரக்கோட்டையைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் மகேந்திரன் (23). டேங்கர் லாரி டிரைவர். இவருடன் இவரது சகோதரர் மணிகண்டன் (24) கிளீனராக வேலை செய்து வருகிறார். இருவரும் நேற்று மாலை கடலூர் சிப்காட்டில் உள்ள கம்பெனியில் பாஸ்பாரிக் ஆசிட் ஏற்ற டேங்கர் லாரியை ஓட்டி வந்தனர். அதற்கு முன்பாக கடலூர் பச்சையாங்குப்பத்தில் டேங்கரை சுத்தம் செய்வதற்காக கிளீனர் மணிகண்டன் டேங்கரை திறந்த போது விஷவாயு தாக்கி மயங்கி டேங்கரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மகேந்திரனும் விஷவாயு தாக்கி விழுந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட அப்பகுதி மக்கள் டேங்கரின் அனைத்து கதவுகளையும் திறந்து தண்ணீரை பாய்ச்சி விஷவாயுவின் வீரியத்தை குறைத்து இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior