உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

சேத்தியாத்தோப்பை அடுத்த விருத்தாங்கநல்லூரில் நூலக கட்டடம் திறப்பு விழா

ஸ்ரீமுஷ்ணம்: 

         சேத்தியாத்தோப்பு அருகே புதிய நூலகக் கட்டடம், விளையாட்டு மைதானம் திறப்பு விழா மற்றும் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா நடந்தது.

           சேத்தியாத்தோப்பை அடுத்த விருத்தாங்கநல்லூரில் 3 லட்ச ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்ட நூலக கட்டட திறப்பு விழா, இலவச காஸ் அடுப்பு சிலிண் டர்கள் வழங்கும் விழா, விளையாட்டு மைதான திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி செல்வராசு தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ராஜாராமன், கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். ஊராட்சி எழுத்தர் செல்வராசு வரவேற்றார். கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நூலக கட்டடம் மற்றும் விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து 370 பேருக்கு இலவச காஸ் அடுப்புகளை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காவேரி, மக்கள் நலப்பணியாளர் ரவி, கீரப்பாளையம் வீரமணி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior