உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

கடலூர் பள்ளி வளாகத்தில் பிடிபட்ட "புளியம்பூ' நாகப்பாம்பு

கடலூர்:

                தனியார் பள்ளியில் புகுந்த ஐந்தரை அடி நீளமுள்ள நாகப்பாம்பை சமூக ஆர்வலர் உதவியுடன் வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர். கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள கட்டடத்தில் அமைத்திருந்த மழைநீர் சேகரிப்பு குழாயில் உடைந்த பகுதியில் பாம்பு ஒன்று புகுந்தது. அதைக் கண்டு திடுக்கிட்ட மாணவர்கள் கூச்சலிட்டனர்.

                தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் துரைசாமி உத்தரவின் பேரில், வன சரகர் சீனிவாசன், வனவர் மணி மற்றும் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற வனவிலங்கு ஆர்வலர் பூனம்சந்த் ஆகியோர் விரைந்து சென்று குழாயில் புகுந்த பாம்பை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.ஒன்றரை மணி நேர முயற்சிக்கு பின், குழாயில் புகையை செலுத்தியதும் ஐந்தரை அடி நீளமுள்ள "புளியம்பூ நாகம்' வகையைச் சேர்ந்த நாகப்பாம்பு மற்றும் ஒரு அடி நீளமுள்ள கட்டுவிரியன் குட்டி பாம்பு ஒன்றும் வெளியே வந்தன. அதை வனவிலங்கு ஆர்வலர் பூனம்சந்த் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior