உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

பண்ருட்டி - கடலூர் சாலையில் வளைந்த மரம் வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி: 

           பண்ருட்டி - கடலூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மரம் வளைவாக  உள்ளதால் வாகன ஒட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். 

             பண்ருட்டி -  கடலூர் சாலை திருவதிகை மெயின்ரோட்டில்  வாலாஜா வாய்க்கால் பாலத் திற்கு அருகில் ரோட்டின் குறுக்கே வளைவாக உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில்  எதிரெதிர் வாகனங்கள் ரோட்டின் குறுக்கே வளர்ந் துள்ள மரத்தால் விபத்து ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.  அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால்  நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற வருவாய்துறைக்கு அனுமதி கோரினர். 

                      ஆனால் ஆர்.டி.ஓ., அனுமதி கிடைக்காமல் அப்படியே கிடப்பில் உள்ளது.வாகன ஒட்டிகளுக்கு இடையூறாக உள்ள மரத்தினை அகற்ற அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior