உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி

சிதம்பரம்: 

             கொள்ளிடம் ஆற்றுப் பாலம் பராமரிப்பையொட்டி வெள்ளை அடிக்கும் பணி நடந்தது.

                     சிதம்பரம் - சீர்காழி சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 650 மீ., நீள பாலம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இப்பாலம் கடலூர் மாவட்டத்தையும் நாகை மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாகவும் உள்ளது. பாலம் கட்டி பல ஆண்டுகள் கடந்து விட்டால் பல இடங்களில் தடுப்பு கட்டைகள் பெயர்ந்தும், சாலை பகுதி பெயர்ந்தும் காணப்பட்டது. அதையொட்டி கடந்த ஒரு சில ஆண்டுகளாக பாலத்தில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது வெள்ளை அடிக்கும் பணி நடந்து வருகிறது. பாலத்திற்கு வெள்ளை அடித்துவிட்டால் மட்டும் போதாது, உறுதி தன்மையையும் சோதித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior