உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க கூடுதல் இடம்

விருத்தாசலம்: 

           விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு ஆணை பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. 

இதுகுறித்து விருத்தாசலம் நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்க செயலாளர் பாபு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

            விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிக்க கொளஞ்சியப்பர் அரசுக் கல்லூரியை நாடும் நிலை உள்ளது. அவ்வாறு மாணவர்கள் வரும்போது கல்லூரியில் போதுமான இடங்கள் பூர்த்தியாகி விட்டதாகவும், சேர்க்கை முடிந்து விட்டதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது. வறுமையில் உள்ள ஏழை மாணவர்கள் இந்த அரசுக் கல்லூரியைத் தவிர வேறு எந்த தனியார் கல்லூரியிலும் பணம் கட்டி சேர முடியாத நிலையில் உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கூடுதலாக 10 சதவீதம் இடம் ஒதுக்கி மாணவர்களை சேர்க்கும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக் கழகப் பதிவாளருக்கும், கல்லூரி முதல்வருக்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior