உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

டீக்கடைகளில் பயன்படுத்திய சமையல் எரிவாயு பறிமுதல்: ஒருவர் கைது

கடலூர்:

              கடலூரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட, வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களை கைப்பற்றினர்.

              கடலூரில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டர்கள் முறைகேடாக டீக்கடைகள், ஹோட்டல்கள், தொழிலகங்கள் மற்றும் ஆட்டோக்கள், கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதல் பணம் கிடைப்பதால், கேஸ் விநியோகஸ்தர்கள் வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர்களை டீக்கடைகள் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்கு அளித்து விடுகிறார்கள். இதனால் வீட்டு உபயோகத்துக்கு சமையல் கேஸ் கிடைப்பதில் காலதாமதமும், தட்டுப்பாடும் ஏற்படுகிறது. கடலூர் புதுநகர் போலீசார் மஞ்சக்குப்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட 5 வீட்டு உபயோக சிலிண்டர்களைப் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் சஞ்சீவிநாதன் (60) கைது செய்யப்பட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior