உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

சி.என்.பாளையம் சுப்பரமணியர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நடுவீரப்பட்டு : 

                 சி.என்.பாளையம் சுப்பரமணியர்,  முத்துமாரியம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு சம்பஸ்ரா மற்றும் 108  திருவிளக்கு பூஜை நடந்தது.
 
                            காலை 10 மணிக்கு மஹா கணபதி ஹோமத் துடன் துவங்கி பின்பு சம்பஸ்ரா பூஜை நடந் தது. 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 4 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத  சுப்பரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடந்தன. பூஜையில் ஏராளமான சுமங்கலிகள் கலந்து கொண்டு அம் மனை வழிபட்டனர். இரவு 9 மணிக்கு சுவாமிகள் வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம் மற்றும் ராஜாராம், சரவணன் தலைமையில் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior