உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக மீண்டும் சம்பத் நியமனம்

கடலூர் : 

                கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக நியமிக் கப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பத் கடலூரில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் அண்ணாதுரை  சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
 
               அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க.,   மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் களை நியமனம் செய்தார். இதில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மீண்டும் நியமனம் செய்யப்பட் டுள்ளார். அவைத் தலைவராக அருணாசலம், இணைச் செயலாளராக சுமதி, துணை செயலாளர்களாக முருகுமணி, தவமணி சக்கவரவர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
                      மாவட்ட செயலாளர் சம்பத் நேற்று மாலை கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள எம்.ஜி.ஆர்., மற் றும் அண்ணாதுரை சிலைகளுக்கு மாலை அணிவித்தார். முன்னதாக அ.தி.மு.க., தொண்டர் கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, முத்துகுமரசாமி, அண்ணா தொழிற் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன்,விவசாய அணி செயலாளர் காசிநாதன், மருத்துவரணி சீனுவாச ராஜா, வக்கீல் பிரிவு பாலகிருஷ்ணன்,சரவணன், மீனவரணி மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior