உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

செம்மேடு ஊராட்சியில் மனுநீதி நாள் ரூ.8.60 லட்சம் மதிப்பில் உதவிகள்

பண்ருட்டி :

               பண்ருட்டி அடுத்த செம்மேடு ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 8 லட்சத்து 60 ஆயிரத்து 395 ரூபாய்க்கான நலத்திட்டங்களை கலெக் டர் (பொறுப்பு) நடராஜன் வழங்கினார்.
 
                    பண்ருட்டி அடுத்த செம் மேடு ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நேற்று ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் சாந்திஅர்ச்சுனன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்                (பயிற்சி) அழகுமீனா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயகுமார், வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், தாசில்தார் பாபு  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஒ., செல்வராஜ் வரவேற்றார்.
 
 முகாமில் கலெக்டர் நடராஜன்(பொறுப்பு) நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:- 

             செம்மேடு ஊராட்சியின் கோரிக்கையின் பேரில்   30ஆயிரம் கொள் ளவு கொண்ட இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 6 லட்சம் செலவில் புதிய தொட்டி கட்டப்படும்.  செம்மேடு- மேலிருப்பு 1.6 கி.மீட்டர் தார்சாலை அமைக்கும் பணி, செம்மேடு- பேர்பெரியான்குப்பம்  சாலை  பணி யும் துவங்க உள்ளது என்றார்.  விழாவில்  8 லட்சத்து 60ஆயிரத்து 39 5ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நடராஜன்(பொறுப்பு) வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior