உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

கால்நடை மருந்து குடோனில் தீ விபத்து

கடலூர் : 

                     கடலூரில் கால்நடை மருந்து குடோனில் ஏற் பட்ட தீ விபத்தில்  மருந்து பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
 
                     கடலூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் சொரக் கால்பட்டு வான்டர் லேன் தெருவில் கால்நடைகளுக்கான கணேஷ் மெடிக்கல் ஏஜென்சி வைத்துள்ளார். கடலூர், திருவண் ணாமலை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு மொத்த மருந்து விற்பனை செய்து வருகிறார். இவரது மருந்து குடோன் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுப்ரமணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மருந்து குடோனில் இருந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மருந்து பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.  இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior