உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

நடராஜர் கோவில் தெற்கு வாயிலை திறக்க ஏழைகள் முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                      சிதம்பரத்தில் நந்தனார் நுழைந்த நடராஜர் கோவில் தெற்கு வாசலை திறக்க கோரி ஏழைகள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
                         சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.  மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட பிற்படுத்தப்பட்ட பேரவை தலைவர் தனசேகரன், ஜோசப் ராஜ் முன்னிலை வகித்தனர். ஏழைகள் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுணன், மக்கள் குடியரசு கட்சி தலைவர் திருவள்ளுவன், பிற்படுத்தப் பட்டோர் பேரவை பொது செயலாளர் வீரவன்னியராஜா, உரிமை கோருவோர் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் கோபாலகிருஷ்ணன், ஆதிதிராவிட நல சங்க நிறுவனர் அன்புதீபன், ஆதிதிராவிட முன் னேற்ற கழக தலைவர் மாமல்லன் கண்டன உரையாற்றினர். தமிழ்தேசிய காங்., மாநில தலைவர் லோகநாதன், மக்கள் தேசம் கட்சி தலைவர் ராசிக்பரித் கோதண்டபாணி, பாட்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior