உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

தலைமுறையை சிறப்பாக உருவாக்கும் பொறுப்பு மாணவிகள் கையில் உள்ளது : நடராஜன்

கடலூர் : 

                     ஒரு தலைமுறையை சிறப்பாக உருவாக்கும் பொறுப்பு மாணவிகள் கையில் தான் உள்ளது என கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் பேசினார்.
 
                 மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. வேதியியல்துறை தலைவர் அனுசூயா தலைமை தாங்கினார். சந்திரன் வரவேற்றார்.
 

                   வேலை வாய்ப்புகள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் துவக்கி வைத்து பேசியதாவது:  இன்ஜினியர், டாக்டர் துறைகள் கிடைக்க வில்லை என வருத்தமடையக் கூடாது. எந்த துறை என்பது முக்கியமல்ல. நீங்கள் எடுக்கும் துறையில் "நம்பர் ஒன்'னாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலே உலகம் உங் களை பாராட்டும்.  ஐ.ஏ. எஸ்-  ஐ.பி.எஸ்., மாணவர்கள் கலைக் கல்லூரிகளில் இருந்துதான் அதிகம் வருகின்றனர். நீங்கள் என்ன கனவு காண்கிறீர்களோ அது போல் ஆவீர்கள். நினைப்பதை பெரிதாக நினைக்க வேண்டும்.
 
                      தற்போது நாட்டில் முக்கியமான பதவிகளில் பெண்கள் தான் உள்ளனர். ஜனாதிபதி, சபாநாயகர், காங்., தலைவர் சோனியா உள்ளிட்டவர்கள் பெண் கள்தான். பெண்கள்  நினைத்தால் சமுதாயத்தை மாற்ற முடியும். ஒரு தலைமுறையை சிறப்பாக உருவாக்கும் பொறுப்பு மாணவிகள் கையில் தான் உள்ளது.  அப்போதுதான் ஜனாதிபதி கூறிய வளமான இந்தியா, வல்லரசான இந்தியாவை உருவாக்கமுடியும் என்றார்.
 
                    திருச்சி மண்டலத் துணை இயக்குனர் (வேலை வாய்ப்பு) சுரேஷ் குமார், பயிற்சித்துறை இயக்குனர் நடராஜன், கணிதத்துறை உதவி பேராசிரியர் சாந்தி, மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் கர்னல் ஜைத்துன் ஆகியோர் பேசினார்.  இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior