உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

பெண்ணாடத்தில் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

திட்டக்குடி : 

                    பெண்ணாடத்தில் காப்பீட்டு திட்டம் மற்றும் வரும்முன் காப்போம் மருத்துவ முகாமில் ஆயிரத்து 270 பேருக்கு இலவச சிகிச்சையளிக்கப்பட்டது.
 
                பெண்ணாடம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுசுகாதாரத்துறை, நோய் தடுப்புத் துறை சார்பில் வரும்முன் காப்போம் மற்றும் கலைஞர் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் நேற்று காலை நடந்தது. மாளிகைகோட்டம் ஊராட்சி தலைவர் வசந்தா தலைமை தாங் கினார். நல்லூர் சேர்மன் ஜெயசித்ரா, ஊராட்சி துணைத்தலைவர் வசந்தா, ஒன்றிய கவுன்சிலர் இந்திராகாந்தி முன்னிலை வகித்தனர். நல்லூர் வட்டார மருத் துவ அலுவலர் டாக்டர் பரமேஸ்வரி வரவேற்றார். முகாமில் டாக்டர்கள் தமிழரசன், வலம்புரிச் செல்வன், சீனுவாசன், விஜயபாபு, ரஜினி, மீனா, கண்காணிப்பாளர் முருகதாஸ் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் இருதயம், சிறுநீரகம், காசநோய், எச்.ஐ.வி., கண் உள் ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர். இதில் ஸ்கேன் 35, எச். ஐ.வி., 36, சிறுநீர் மற்றும் இரத்தம் 684 உட்பட ஆயிரத்து 270 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளும், 12 பேர் கண்அறுவை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் நல்லூர் ஆணையர்கள் சந்திரகாசன், ரவிசங்கர்நாத், தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வி, மருந்தாளுனர் முருகன், ஊராட்சி உறுப்பினர்கள் தமிழ்செல்வி, செல்வம், காளிமுத்து உட் பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior