உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

வீட்டுக்கு தீ வைப்பு: 20 பேர் மீது வழக்கு

பண்ருட்டி : 
                 
               பண்ருட்டியில்  குடிசை வீட்டிற்கு தீ வைத் தவர் களை போலீசார் தேடி வருகின்றனர்.
 
                   பண்ருட்டி லிங்க்ரோடு சாலையில் குடியிருப்பவர் சங்கர். இவரது குடிசைக்கு அருகில்  உறவினர்கள் தனகோடி, மங்கம்மாள்  குடியிருந்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்னையில் வசிக்கும் குமார்  மற்றும்  ஆதரவாளர் கள் 20பேர் குடிசை வீட்டிற்குள் புகுந்து இந்த இடத்தை நாங்கள் வாங்கி விட்டோம் என வீட்டிற்கு தீ வைத்தனர். இதனை தடுத்த  சங்கர் மனைவி முத்துலட்சுமி, மனோகர், அவரது மனைவி லீலா மற்றும் தனகோடி, மங்கம்மாள் ஆகியோர் மீது அக்கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி வீட்டில் இருந்த பொருட் களை சூறையாடினர். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் குமார் உள்ளிட்ட 20பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior