உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

பெண்ணாடம் - செந்துறை அரசு பஸ் இயக்கம்

திட்டக்குடி : 

               பெண்ணாடம்-செந் துறை புதிய வழித் தடத்தில் அரசு பஸ் இயக்க விழா நடந்தது.
 
                       பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு தி.மு.க., நகர செயலாளர் குமரவேலு தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி, மாவட்ட இளைஞரணி மதியழகன், நகர இளைஞரணி காதர், செந்துறை தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆண்டிமடம் எம்.எல். ஏ., சிவசங்கரன் புதிய வழித் தடத்தில் அரசு பஸ்சை இயக்கி வைத்தார்.  

                       நிகழ்ச்சியில் தங்கசீனிவாசன், துணை செயலாளர்கள் முருகேசன், தமிழ்ச்செல்வி, வார்டு செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், ராஜேந்திரன், சுகுணா உட் பட பலர் கலந்து கொண்டனர்.  தினசரி 8 முறை இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior