உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

சிறுபாக்கத்தில் தீயணைப்பு நிலையம் ஊராட்சி தலைவர் முதல்வருக்கு மனு

சிறுபாக்கம் : 

                  சிறுபாக்கத்தில் தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும் என முதல்வருக்கு ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன் மனு அனுப்பியுள்ளார்.
 
                  திட்டக்குடி தாலுகாவில் சிறுபாக்கம் குறுவட்ட தலைமையிடமாக உள்ளது. இதனை சுற்றி எஸ். புதூர், அரசங்குடி, மாங்குளம், மங்களூர், மலையனூர், ஒரங்கூர் உள்ளிட்ட 40 க்கு மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான ஏழை மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். தீ விபத்து மற்றும் இயற்கை இடர்பாடு காலங்களில் சம்பவ இடத்திற்கு தகவல் தெரிந்து வேப்பூர், திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து பாதிப்பை சரி செய்வதற்குள் இழப்பீடு அதிகமாக ஏற்படுகிறது.  எனவே, போர்க்கால அடிப்படையில் ஏழைகளின் நலன் கருதி சிறுபாக்கத்தை தலைமையிடமாக கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior