உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி

விக்கிரவாண்டி : 

                போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக  மிரட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
 
                   வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(48). இவர் மீது பல திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. கடந்த மூன்று  தினங்களுக்கு முன் போலீசார், தனது மனைவி மற்றும் குழந்தைகளை மிரட்டியதாக கூறி நேற்று காலை 9.30 மணியளவில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். விக்கிரவாண்டி போலீசார், தீயணைப்பு அதிகாரிகள், ஊராட்சித் தலைவர் வசந்தி நாகராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
                  வழக்குகள் குறித்து தன்னை போலீசார் தொந்தரவு செய்ய கூடாது என எழுதி தர வேண்டும் என்று வருவாய் துறையினரிடம் ராஜா கூறினார்.  தீயணைப்பு வீரர் கார்த்திக்  பைப் வழியாக டேங்க் மேல் ஏறினார். அதனை அறிந்த ராஜா கைலியை கிழித்து டேங்க் ஏணியில் சுறுக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதை பார்த்த ராஜாவின் மகள் இளம்தாரகை(15) மயங்கி விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டது.
 
                   மண்டல துணை தாசில்தார்  சோமசுந்தரம், வருவாய் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் எஸ்.பி.,யிடம் நேரில் அழைத்து சென்று பேச வைப்பதாக கூறியதன் பேரில் சமாதானம் அடைந்து தனது வீட்டிலிருந்து மாற்று துணி எடுத்து வரக்கூறி மதியம் 2.10 மணிக்கு டேங்க் மேலிருந்து இறங்கினார். நான்கரை மணி நேர போராட்டத்தை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். ராஜாவை போலீசார் வாக்கூரிலேயே விட்டுவிட்டுச் சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior