உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 29, 2010

துவக்க விழா

ராமநத்தம் : 

                     ராமநத்தம் அடுத்த தொழுதூரில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க விழா நடந்தது.
 
                  தொழுதூர் ஊராட்சி தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். தொழுதூர் ஒன்றிய கவுன்சிலர் நாராயணசாமி, உழவர்மன்ற தலைவர்கள் மேலக்கல்பூண்டி விஜயகுமார், ஆலத்தூர் ரவிச்சந்திரன், நாம் அமைப்பு வேணுகோபால் முன்னிலை வகித்தனர். கீழக்கல்பூண்டி உழவர் மன்ற தலைவர் ரவிச் சந்திரன் வரவேற்றார். திட்டக்குடி தாசில்தார் கண்ணன் குத்துவிளக்கு ஏற்றினார்.துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மைத் துறை) மணி கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் பாலு, உதவியாளர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நெல் கொள் முதல் நிலைய உதவியாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior