உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

வரதராஜப் பெருமாள் கோயில் நிலம் மீட்பு

பண்ருட்டி:

                   ​ பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டு செயல் அலுவலர் சிவஞானத்திடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.பண்ருட்டி காந்தி சாலையில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது.​  இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் எல்.என்.புரத்தில் 2.77 ஏக்கர் உள்ளது.இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம் குத்தகைக்கு பயிர் செய்து வந்தார்.​ நீண்ட நாள்களாக குத்தகை பாக்கி செலுத்தாததால் கடலூர் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வருவாய் நீதிமன்ற நீதிபதி,​​ குத்தகை பாக்கி செலுத்தாத வழக்கறிஞர் ஆறுமுகத்திடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து வருவாய் நீதிமன்ற செயலக ஆய்வாளர் நிலத்தை கையகப்படுத்தி,​​ ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் சிவஞானத்திடம் அண்மையில் ஒப்படைத்தார்.கையப்படுத்தப்பட்ட நிலத்தை வருவாய்த் துறை நில அளவர்கள் சனிக்கிழமை அளவீடு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior