உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

கவுன்சிலர்களுக்கு தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றம்

கடலூர் :

                          எங்களுக்கு தெரியாமல் தீர்மானங்கள் நிறைவேற் றப்படுவதாக கடலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.கடலூர் ஒன்றியக் குழு கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் சாந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காசிராஜன், பி.டி.ஓ., க்கள் சீனிவாசன், பத்மநாபன் மற்றும் கவுன் சிலர்கள் பங்கேற்றனர். தே.மு.தி.க., குருநாதன் பேசுகையில், குமளங் குளம் ஊராட்சியில் போர் வெல்கள் அடிக்கடி பழுதாகிறது. மக்கள் குடிநீருக்கு அவதிபடுகின்றனர். சரிசெய்யவில்லை எனில் மக் களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனறார். இதற்கு, அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என சேர்மன் பதில் அளித்தார். மா.கம்யூ., தட்சணாமூர்த்தி பேசுகையில், கவுன்சிலர்களுக்கு தெரியாமலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. ஒன்றிய கட்டடம் கட்டும் பணி இதுவரை துவங்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை திறந்த வெளியில் நடத்த வேண்டும் என்றார். இதற்கு சேர்மன், புதிய கட் டடம் கட்ட ஊரக வளர்ச் சித்துறை சார்பில் ஒன் னரை கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளதால், மூன்று மாதங்களில் பணி துவங்கும் என்றார்.

                                தே.மு.தி.க.,  அய்யனார் பேசுகையில், திருவந்திபுரம்-ஓட்டேரி சாலையில் கல்வெர்ட்டுகள் அமைக்க இரண்டு பக்கமும் தோண்டப்பட்ட பள்ளங்கள் பணி முடிந்தும் மூடவில்லை. இதனால் அப்பகுதியில் ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய் யும் நெல்லை வெளியே கொண்டு வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் என்றார். இதற்கு உடன் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். கூட்டத்தில் மழையில் இடிந்த ஒன்றிய அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணியை அரசு விரைவில் துவக்க வேண் டும். வெள்ளக்கரை குறவன்பாளையம் காலனியில் சிமென்ட் பைப் லைன், கல்வெர்ட் அமைக்க 40,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ராமாபுரம் ஊராட்சி வண்டிக் குப்பத்தில் சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை சமப்படுத்தும் பணியை மேற்கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior