உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

பண்ருட்டி மோதல்​ போலீஸ் மீது விடு​த​லைச் சிறுத்தைகள் புகார்

கடலூர்:

                  பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனியில் நடந்த மோதல் தொடர்பாக,​​ போலீஸôர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக,​​ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர். கடந்த 17-ம் தேதி ஒரு பெண்ணைக் கேலி செய்தது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.​ மோதலைத் தடுக்க போலீஸôர் வந்தனர். இதில் இரு போலீஸ் காவலர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர்.​ இது தொடர்பாக பண்ருட்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து சிலரைக் கைது செய்து உள்ளனர்.இப்பிரச்னை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு.திருமாறன்,​​ நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பது:÷செட்டிப்பட்டறைக் காலனியில் 17-ம் தேதி நடந்த மோதலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.​ போலீஸôர் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து,​​ சிலரைக் கைது செய்து உள்ளனர்.  

                                 எனினும் செட்டிப்பட்டறைக் காலனியில் மட்டும் போலீஸôர் இரவு பகலாக ரோந்து சுற்றி வந்து பலரைத் தேடுகிறார்கள்.​ இதில் போலீஸôர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார்கள்.​ 20-ம் தேதி காவல்துறைகண்காணிப்பாளரைச் சந்தித்து மோதல் தொடர்பாக மேல்நடவடிக்கை வேண்டாம்,​​ இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரினோம்.÷ஆனால் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.​ மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க ஆர்.டி.ஓ.​ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior