உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

மொழிப்போர் தியாகிகள் தினம்

சிதம்பரம்:​ 

                     சிதம்பரத்தில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

                       திமுக:​​ நகர திமுக சார்​பில் காந்தி சிலையி​லிருந்து ஊர்வலமாகச் சென்று ​ அண்ணாமலை நகரில் உள்ள ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.​ அங்கு நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இந் நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.திருநாவுக்கரசு,​​ மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் த.ஜேம்ஸ் விஜயராகவன்,​​ நகர இளைஞரணி அமைப்பாளர் அப்புசந்திரசேகரன்,​​ குமராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மாமல்லன் மறறும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.÷அதிமுக:​​ நகர அதி​முக சார்​பில் கீழ​வீதி மாவட்ட கட்சி அலு​வ​லகத்திலிருந்து நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அண்ணாமலை நகர் ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.÷அங்கு ராஜேந்திரன் சிலைக்கு மாநில எம்ஜிஆர் இளைஞரணி செயலர் எம்.ஏ.கே.முகில்,​​ மாவட்டச் செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ,​​ செல்விராமஜெயம் எம்எல்ஏ,​​ மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் சொ.ஜவகர்,​​ முன்னாள் நகர் மன்றத் தலைவர் எம்.எஸ்.என்.குமார்,​​ மாவட்ட ஜெ.​ பேரவை செயலர் வி.கே.மாரிமுத்து உள்ளிட்டோர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். மதிமுக:​​ மறு​ம​லர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நகர மதிமுக அலுவலத்திலிருந்து நகரச் செயலர் எல்.சீனுவாசன் ஊர்வலமாக புறப்பட்டு ராஜேந்திரன் சிலையை அடைந்தனர்.

                      மாவட்ட அவைத்தலைவர் கு.பெருமாள்,​​ குமராட்சி ஒன்றியச் செயலர் பா.ராசாராமன்.​ சிவ.திருநாவுக்கரசு,​​ சி.ராஜூ உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.​ மதிமுக மாணவரணி சார்பில் மாணவரணி செயலாளர் தி.லோகசுப்பிரமணியன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.÷மதிமுக மாநில ஆசிரியர் மன்றத் தலைவர் முனைவர் மு.பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior