உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் ஊர்வலம்

சிதம்பரம் : 

            மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள தியாகி ராஜேந்திரன் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர்.

                        தி.மு.க.,: நகர செயலாளர் செந் தில்குமார் தலைமையில் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று அண்ணாமலைநகர் ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ஊர்வலத்தில் ஒன்றிய செயலாளர் மாமல்லன், பொதுக் குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜேம்ஸ் விஜயராகவன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அதேபோன்று தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் தலைமையில் மற்றொரு தரப்பினர் ஊர்வலமாக சென்று ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தனர். பா.ம.க.,: அண்ணாமலைநகர் நகர செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிட்டிபாபு தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். சொத்து பாதுகாப்பு குழு தேவதாஸ் படையாண்டவர், கவுன்சிலர் ரமேஷ், நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

                                     ம.தி.மு.க.,: நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஊர்வலமாக சென்று ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. மாவட்ட தலைவர் பெருமாள், ஒன்றிய செயலா ளர்கள் ராஜாராமன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ம.தி.மு.க., மாணவரணி: மாணவரணி செயலாளர் லோகசுப்ரமணியன் தலைமையில் மாநில ஆசிரியர் மன்றத் தலைவர் பக்கிரிசாமி, ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். பேரூராட்சி செயலாளர் சீனிவாசன், பத்மநாபன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அண்ணாமலைநகர்: பேரூராட்சி சேர்மன் கீதா, ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். துணைத் தலைவர் குஞ்சுபாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பரங்கிப்பேட்டை: நகர தி.மு.க., சார்பில் பரங்கிப் பேட்டை ரெங்கப் பிள்ளை மண்டபத்தில் உள்ள ராஜேந்திரன் சமாதியில் பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் மாலை அணிவித்தார். நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், கவுன்சிலர் காஜா கமால் பங்கேற்றனர். மூ.மு.க.,: மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பேரவையும் இணைந்து மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் ஊர்வலம் நடந்தது. மூவேந்தர் முன் னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண் டையார் தலைமை தாங்கி தியாகி ராஜேந் திரன் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீரவன்னிய ராஜா, மூ.மு.க., மாநில இணைத் தலை வர் நடராஜன், தலைமை செயலாளர் செல்வராசு, வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் பேரவை மாவட்ட தலைவர் தனசேகரன், இணை செயலாளர் பாஸ்கர், அமைப்பு செயலா ளர் ராஜேந்திரன், தொழிற்சங்க நிர்வாகிகள் இளங்கோவன், கிருஷ்ண மூர்த்தி, மூ.மு.க மாணவரணி காசி மகேஸ்வரன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior