உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

சிதம்பரம்,​:

                            ​ சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மாணவர்களின் சிறப்பு முகாம் சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. இம்முகாமில் கிராமத்தை சுத்தம் செய்தல்,​​ மரக்கன்று நடுதல்,​​ வேலி அமைத்தல்,​​ இளைஞர்களுக்கு குழாய் பம்பு பழுது நீக்கும் பயிற்சி,​​ யோகா மற்றும் தியானப்பயிற்சி,​​ பள்ளி செல்லாத சிறுவர்கள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் ஆகியோரை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் குறித்த ஆலோசனை,​​ நீர் ஆதாரங்கள் கண்டறிதல்,​​ மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு,​​ மழை சேகரிப்புத் தொட்டி அமைத்தல்,​​ சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணுவது,​​ பொதுமருத்துவ முகாம்,​​ ரத்ததானம் மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளை திட்ட அலுவலர் ஏ.ஜெயக்குமார் தலைமையில் மாணவர்கள் மேற்கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior