உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

கன்னித் திருவிழா

சிதம்பரம்:​ 

                            சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் கிராமத்தில் இளம் பெண்கள் பங்கேற்ற புதுமையான கன்னித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. வயதிற்கு வந்த இளம்பெண்கள் தங்களுக்கு திருமணமாகவில்லை என வெளிப்படுத்த இந்த கன்னித் திருவிழா ஆண்டு தோறும் தைமாதம் நடத்தப்பட்டு வருகிறது.​  திங்கள்கிழமை நடைபெற்ற இத்திருவிழாவையொட்டி ஊரில் உள்ள 12 தெருக்களிலும் களிமண்ணால் ஆன சாமி சிலைகள் செய்யப்பட்டு வைக்கப்பட்டு அச்சிலைகளை இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் வழிபட்டனர்.

                                    மேலும் கோலாட்டம்,​​ கும்மியாட்டம்,​​ சிலம்பாட்டம்,​​ சுருள் கத்தி விளையாடுதல் உள்ளிட்ட விளையாட்டுகளை இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடினர்.​  விழாவின் இறுதியாக களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை இளைஞர்களும்,​​ இளம்பெண்களும் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து வழிபட்டனர்.​  இது போன்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என ஊர் ஐதீகமாக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior