உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

பஞ்சர் ஒட்டும் போராட்டம் இந்திய கம்யூ., முடிவு

திட்டக்குடி :

                      திட்டக்குடி தாலுகா சாலைகளை சீரமைக்க கோரி இந்திய கம்யூ., சார்பில் ஆடு, மாடு, கழுதையுடன் பஞ்சர் ஒட்டும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  திட்டக்குடியில் இந் திய கம்யூ., வட்டக் குழு கிளை செயலாளர் கூட் டுக்கூட்டம் நடந்தது. காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி, சுப்ரமணியன், வட்ட செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிவாசகம் விளக்கி பேசினார். கூட்டத்தில் தொடர்மழையால் திட்டக்குடி அனைத்து சாலைகளும் மிக மோசமான நிலையில் உள்ளது.  இதனை உடனடியாக சீரமைக்க கோரி வரும் 8ம் தேதி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பாக ஆடு, மாடு, கழுதையுடன் பஞ்சர் ஒட்டும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior