உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

உயிர்காக்கும் உயர் சிகிச்சை புகைப்படம் எடுக்கும் பணி

விருத்தாசலம,:

                     விருத்தாசலம் வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,​​ உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான நிழற்படம் எடுக்கும் பணி,​​ சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. விருத்தாசலம் வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,​​ உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான இரண்டாம் கட்ட நிழற்படம் எடுக்கும் பணி அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது. இதில் நிழற்படம் எடுக்க தவறியவர்களுக்கு,​​ ஜனவரி 20-ம் தேதி முதல் 3 மாதங்கள் வரை விருத்தாசலம் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் நிழற்படம் எடுக்கும் பணி நடைபெற உள்ளது. இத் திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் நிழற்படம் எடுக்க வரும்போது,​​ ரேஷன் கார்டு,​​ விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு அட்டை மற்றும் தொழிலாளர் நலவாரிய அட்டை எடுத்து வர வேண்டுமெனவும்,​​ மேற்கண்ட அடையாள அட்டை இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவான வருமானச் சான்றைப் பெற்று திட்டத்தில் பயன்பெறுமாறு சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் விஜயலட்சுமி கேட்டுக் ​கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior