உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

கொத்தமல்லி பயிர் விளைச்சல் அமோகம் : வேப்பூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

சிறுபாக்கம் :

                       வேப்பூர் பகுதியில் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட மல்லி பயிர்கள் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். வேப்பூர், பெரியநெசலூர், கண்டப்பங்குறிச்சி, ஆண்டிமரூர், கழுதூர், அரியநாச்சி, புலிகரம்பலூர், சிறுபாக்கம், மங்களூர், மலையனூர், சித் தேரி, வடபாதி, மாங் குளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களின் மானாவாரி நிலங்களில் மணிலா பயிரை அறுவடை செய்த பின் நிலத் தில் உள்ள ஈரப்பதம் மற் றும் பனிகாலத்தை கருத் தில் கொண்டு கொத்தமல்லி பயிரினை பயிர் செய்தனர். இதன் ஊடுபயிராகவும், மல்லி பயிரில் நோய் தாக்கத்தை கட்டுபடுத்தவும் நாட்டு துவரை விதைத்தனர். ஜனவரி முதல் வாரத் தில் பெய்த சாரல் மழையில் நல்ல விளைச்சல் கண்ட கொத்தமல்லி பயிர் தற்போது வெண்ணிற பூக்களுடன் காய்பிடிக்கும் தருணத்தில் அமோக விளைச்சல் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஏக்கருக்கு 25 மூட்டைகள் அறுவடை செய்த விவசாயிகள், நாற் பது கிலோ கொண்ட ஒரு மூட்டையை இரண் டாயிரம் ரூபாயிற்கு விற்பனை செய்தனர்.

                     இந்தாண்டு ஏக்கருக்கு 30 மூட்டைகளுக்கு மேல் கிடைக்கும் எனவும், சென்ற ஆண்டை விட மல்லி காய்கள் திடமாக இருப்பதால் மூட்டை மல்லி மூவாயிரம் முதல் நான்காயிரம் வரை விலை போகும் என்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior