உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

வரிஞ்சிப்பாக்கம் மலட்டாறு பாலம் கட்டுமான பணி துவக்கம்

பண்ருட்டி :

                             பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக் கம் மலட்டாறு பாலம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

                               விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அணைக்கட்டில் இருந்து மலட்டாற்றை ஜீவநிதி மலட்டாறு நிலத்தடி நீர்மேம்பாட்டு எழுச்சிகூடல் அமைப்பு அரசின் ஒத்துழைப்பு  மற்றும் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி நிறுவனத்தின் பங்களிப்புடன்  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையம் வரை 43 .கி.மீ.,  வரை தூர்வாரினர். இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் ஆற்றில் செல்லும் போது ஆற்றை கடக்க முடியாமல் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம் தனியாலம்பட்டு, காரப்பட்டு, சேமங்களம் பகுதியில் இரண்டு ஆண்டிற்கு முன் பாலம் கட்டப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் ரெட்டிகுப்பம், திருத்துறையூர், கரும்பூர், வரிஞ்சிப்பாக்கம், கட்டமுத்துப்பாளையம்  ஆகிய பகுதியில் மலட்டாறு பாலம் கட்டப்படாமல்  ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் போது  அதனை சுற்றியுள்ள 50 கிராமமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதற்கு தீர்வுகாண  நெல்லிக் குப்பம் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன், கலெக்டர், மத்திய, மாநில  அமைச்சர்களை நேரில் அழைத்து வந்து பாலம் கட்டுவதற்கு  கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து  மலட்டாற்றில் முதற்கட்டமாக வரிஞ்சிபாக்கம் ஊராட்சி பகுதியில் ஒப்படைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வருவாய் திட்டத்தில் 5 லட்சத்து 89ஆயிரம் செலவில் பாலம் கட்டும் பணி கடந்த மாதம் துவங்கியது. சில நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால், பாலம் கட்டுமான நிறுத்தப்பட்டது. தற்போது மழை விட்டு வெயில் காய்ந்துவருவதாக கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பாலம் கட்டுவதற்காக பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior