உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

சி.முட்லூர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்தாய்வு

கிள்ளை :

                                         சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் "பிளஸ் 2' மாணவர்கள்,பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந் தாய்வுக் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் செங்குட் டுவன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் ஜீவானந்தம் வரவேற்றார்.  உதவி தலைமை ஆசிரியர்கள் நடராஜன், சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தவமந்திரி வெங்கடேசன், மாணவர்களுக்கு முக்கிய வினாவிடை புத்தகங்களை வழங்கினார். தேர்வு நேரத்தில் மாணவர்கள்  கடை பிடிக்க வேண்டிய வழி முறைகள், உடல்நலம், மன நலம் குறித்து  ஆலோசனை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் மோகன், விஜயலட்சுமி, சாந்தி, சுமதி, வேல்விழி, செல்வமாதவன் பாட வாரியாக ஆலோசனை வழங்கினர்.  மெல்ல கற்கும் மாணவர்கள் குறித்து  பெற்றோர் களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior