உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 26, 2010

நேரடி நெல் கொள்முதல் நிலையம் சேத்தியாதோப்பில் திறக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு :

                   சேத்தியாதோப்பு பகுதியில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்களை விரைவாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

                        சிதம்பரம், காட்டுமன் னார்குடி தாலுகாவில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கலெக்டர் அறிவித்தார். இப்பகுதியில் அறுவடை துவங்கி 15 நாட் களுக்கு மேலாகியும் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. குறிப்பாக சேத்தியா தோப்பு குறுக்கு ரோடு, வீரமுடையாநத்தம் பகுதியில் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை நெல்லை தனியாரிடம் அவர்கள் நிர்ணயம் செய்யும் விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

                    மேலும் சேத்தியா தோப்பில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் பெயரளவிற்கு இயங்குவதாலும் மாவட்ட விற்பனை குழுவின் அலட்சியத்தாலும் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பொருட்கள் கொண்டு வர அஞ்சுகின்றனர். இதனால் தனியார் நெல் மற்றும் தானிய விற்பனையாளர்களின் பிடியால் சிக்கி விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெ

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior