உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

ஊரக சுய உதவிக் குழுக்களுக்கு 26ம் தேதி அடையாள அட்டை

கடலூர்:

                       ஊரக சுய உதவிக்குழுக்களுக்கு வரும் 26ம் தேதி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்  குழுக்களுக்கான அடையாள அட்டை 8837 குழுக்களுக்கு வழங்குவது குறித்து முன்னோடி கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) தலைமை தாங்கினார். இதில் ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தொண்டு நிறுவன செயலர்கள் பங்கேற்றனர்.

                          கூட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கான அடையாள அட்டைகள் ஊரகப்பகுதியில் 26ம் தேதி கிராம சபா கூட்டத்தில் வழங்குவதெனவும். அடையாள அட்டைகள் பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வரும் 30ம் தேதி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஊரகப் பகுதியில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிட இளநிலை உதவியாளர் நிலைக்கு குறையான நிலையில் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியினை மேற்பார்வையிட வட்டார அளவில் பகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior