உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

மகளிர் குழுவினர் அறிவித்த உண்ணாவிரதம் : அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் வாபஸ்

திட்டக்குடி:

                       அடிப்படை வசதிகள் கோரி மகளிர் சுய உதவிக்குழுவினர் அறிவித்த உண் ணாவிரத போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த் தையால் வாபஸ் பெறப் பட்டது. திட்டக்குடி பேரூராட்சி 3 மற்றும் 4வது வார்டுகளில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இலவச காஸ் அடுப்பு வழங்க பணம் வசூலித்த கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மகளிர்சுய உதவிக்குழுவினர் நேற்று திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவிக்கப்பட்டது.

                               அதனையடுத்து நேற்று முன்தினம் மாலை தாசில் தார் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் துணை தாசில்தார்கள் பாலு, மகாராணி, வட்ட வழங்கல் அலுவலர் செழியன், பேரூராட்சி அலுவலர்கள் ஜெயராஜ், புஷ்பநாதன், கவுன்சிலர் செந்தில் மற்றும் சுய உதவிக்குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் நிதியாண்டில் 3 மற்றும் 4வது வார்டுகளுக்கு வளர்ச்சி பணிகளில் முன்னுரிமை அளிக்க பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலருக்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று போராட்டக் குழுவினர் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior