உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

டாஸ்மாக் ஊழியர் கொலை : மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                   டாஸ்மாக் ஊழியர் கொலையை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை: 

                 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலை பள்ளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர் முனியப்பன் அந்த கடையிலேயே படுகொலை செய் யப்பட்டுள்ளார். இச்செயலை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டித்தரும் டாஸ்மாக் பணியாளர்களின் பரிதாப நிலையை பரிசீலித்து பணியாளரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். தினமும் லட்சக்கணக்கில் பணத்தை கையாண்டு வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியரின் படுகொலையை கண்டித்து அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக் கப்பட்டுள்ள டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத் தப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior