உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி: 

              போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் புதன்கிழமை பண்ருட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.26.12.2009 அன்று நள்ளிரவில் கடை இடிப்பு - பொருட்கள் சூறை, லிங்க் ரோட்டில் 100 ஆண்டுகளாக குடியிருந்த குறவர்களின் வீடுகள் இடிப்பு மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்த குற்றவாளிகள்-சமூக விரோதிகள் மீது சட்டப்படியான பொருத்தமான வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும், பஸ் நிலையத்தில் வியாபாரிகள் மீது தாக்குதல், மாமூல் வசூல் உள்ளிட்ட போலீஸôரின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட்டன.
 
                           இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலர் பி.துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலர் எம்.சேகர் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயக்குமார், மதிமுக நகரச் செயலர் கோ.காமராஜ், பாமக மாவட்ட அமைப்புச் செயலர் கோதண்டபாணி, தேமுதிக மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், புரட்சி பாரதம் மாவட்டச் செயலர் தெய்வீகதாஸ், பாஜக மாவட்ட துணை தலைவர் செல்வகுமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior