உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

கொடுத்த கடனை திருப்பி கேட்ட தகராறு : அண்ணன், தம்பியை தாக்கிய இருவர் கைது

சிதம்பரம்:

                   கொடுத்த கடனை திருப்பி கேட்ட தகராறில் அண்ணன், தம்பியை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் கவரப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் இளவழகன் (32). இவர் சிதம்பரநாதன்பேட்டை சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத் திருந்தார். கடனை திருப்பி கேட்டதால் விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணாமலைநகர் மருத்துவகல்லூரி அருகே வந்த இளவழகனை கடன் வாங்கியவரின் நண்பர்க ளான பன்னப்பட்டு கலியபெருமாள் மகன் பாண்டியன் (24), மாரியப்பா நகர் கிருபாகரன் (28) உள்ளிட்ட கும்பல் தாக்கியது. காயமடைந்த இளவழகன் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்துவிட்டு அவரது அண்ணன் இளவரசனுடன் பஸ் ஏற சிதம்பரம் பஸ் நிலையம் வந்தார். அப்போது காந்தி சிலை அருகே மீண்டும் அதே கும்பல் இளவரசனையும் தாக்கியது. இதுகுறித்து இளவரசன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். நகர சப் இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்கு பதிவு செய்து பாண்டியன், கிருபாகரன் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior