உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

வழிப்பறியில் ஈடுபட முயன்ற ஆட்டோ டிரைவர் கைது

கடலூர்:

                     காதலிக்கு செலவு செய்ய பணம் இல்லாததால் வழிபறியில் ஈடுபட முயன்ற ஆட்டோ டிரைவர் வீச்சு அரிவாளுடன் கைது செய்யப் பட்டார். கடலூர் புதுநகர் இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செம் மண்டலம் குண்டுசாலை அய்யனார் கோவில் அருகே ஆட்டோவில் வீச்சு அரிவாளுடன் இருந்த டிரைவர் போலீசாரை கண்டதும் தப்பியோடினார். அவரை, போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் சிவா(26) என்பதும், இவர் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டாண் டாக காதலித்து வருவதும், அவருக்கு செலவு செய்ய பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி செய்வதற் காக வீச்சரிவாளுடன் காத்திருந்தது தெரிய வந்தது. கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து சிவாவை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த ஆட்டோ மற்றும் வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior