உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

கார் மோதி காயமடைந்த முதியவர் யார்?

சிதம்பரம்:

               சிதம்பரம் அருகே சுமோ கார் மோதி காயமடைந்த முதியவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். சிதம்பரம்-சீர்காழி மெயின்ரோட்டில் சிதம்பரம் நோக்கி 58வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.  கூத்தங்கோவில் அருகே வரும்போது பின்னால் வந்த சுமோ கார் அவர் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.  இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior