உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

கெமிக்கல் கம்பெனி மேலாளருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

கடலூர்:

                   தனியார் கம்பெனி உதவி மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் உள்ள கெம்பிளாஸ்டி கெமிக்கல் கம்பெனியில் உதவி மேலாளராக பணி புரிபவர் ஜோசப் லியாண்டர். இவர் கம்பெனியில் கேண்டீன் நடத்துவதற் காக டெண்டர் விட நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் செம் மங்குப்பம் தங்கவேல் மகன் காத்தவராயன்(25), கேண்டீனை எனக்குத் தான் தர வேண்டும். இல்லை என்றால் கொலை செய்துவிடுவதாக, மொபைல் போன் மூலமும், கடந்த 16ம் தேதி டெண்டர் விடுவதற் கான பணியை மேற்கொண்டிருந்த உதவி மேலாளர் ஜோசப் லியாண்டரை மிரட்டினார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, காத்தவராயனை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior