உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

சாப்பிடும் போது தகராறு : இரண்டு பேர் கைது

புவனகிரி:

               ஓட்டலில் சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். புவனகிரி அடுத்த ஆயிபுரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கீரப்பாளையத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப் போது புருஷோத்தமனுக் கும், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த கீரப்பாளையம் ஆற்றங்கரை தெரு அம்மூர்த்தி (32) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அம்மூர்த்தி மற்றும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகனும் சேர்ந்து புருஷோத்தமனை இரும்பு பைப்பால் தாக்கினர். அதில் படுகாயமடைந்த புருஷோத்தமன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து அம்மூர்த்தி(32),வேல்முருகன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior