உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

குடியரசு தின விளையாட்டுப் போட்டி நெய்வேலி பள்ளி மாணவிக்கு தங்கம்

நெய்வேலி: 

                      ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான 52-வது குடியரசு தின தடகளப் போட்டியில் நெய்வேலி செயின்ட் ஜோசப் ஆப் குளூனி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பள்ளிகளுக்கு இடையே இம்மாதம் 10 முதல் 12-ம் தேதி வரை ஈரோடு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இப்போட்டியில் மாநிலம் முழுவதிலிமிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்கேற்றனர். இதில் நெய்வேலி செயின்ட் ஜோசப் ஆப் குளூனி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி  சௌமியா 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் தங்கமும் உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளியும், 200 மீ ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார். மாநில அளவிலான போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவியையும், பயிற்றுநர் ஆர்.சங்கரனையும் பள்ளி முதல்வர் மாசிலாமேரி பாராட்டினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior