உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

ரூ.1.5 லட்சம் கஞ்சா பதுக்கல் பண்ருட்டியில் இரு பெண்கள் கைது


பண்ருட்டி: 

                    பண்ருட்டியில் வீட்டு தோட்டத்தில் ஒன்னரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். திருச்சியிலிருந்து கஞ்சா கடத்தி வந்து பண்ருட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் பண்ருட்டி பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

                            அதில் கிடைத்த தகவலின் பேரில் பண்ருட்டி ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த சிவஞானம் மனைவி விஜயா (55), அம்பேத்கர் நகரை சேர்ந்த குத்புதீன் மனைவி சந்திரா (40) ஆகியோர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தினர். அதில் வீட்டில் பூஜை அறையில் சிறு, சிறு கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய சோதனையில் வீட்டின் தோட்டத்தில் பாரலில் பள்ளம் தோண்டி புதைத்து வைத்திருந்த ஐந்தரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒன்னரை லட்சம் ரூபாயாகும். விஜயா மற்றும் சந்திராவை கைது செய்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior