உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

ரேஷன்​ கடையை முற்​றுகையிட்ட மக்கள்

 கட​லூர் :

                  தொடர்ந்து தாம​தமாகத் திறக்கப்பட்டுவரும் ரேஷன் கடையை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். விலைவாசி விஷம்போல் உயர்ந்து வரும் நிலையில்,​​ ​ ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.​ அதே நேரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீதான புகார்களும் அதிகரித்து வருகிறது. கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன்கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடை தொடர்ந்து,​​ தாமதமாகத் திறக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.​ மேலும் இக்கடையில் ரேஷன் பொருள்கள் விநியோகம் முறையாக நடைபெறுவது இல்லை என்றும்,​​ பல நாள்கள் மூடியே கிட்டப்பதாகவும் பொதுக்கள் தெரிவிக்கிறார்கள்.​ துவரம்பருப்பு,​​ கோதுமை மாவு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுவதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கிறார்கள். செவ்வாய்க்கிழமை காலை 10-30 மணி ஆகியும் ரேஷன் கடை திறக்கப்படாதது குறித்து ​மக்கள் பெரிதும் ஆத்திரம் அடைந்தனர்.​ ரேஷன் கடை விற்பனையாளருக்கு எதிராக சிறிது நேரம் குரல் எழுப்பினர்.​ பின்னர் விற்பனையாளர் வந்து கடையைத் திறந்தபோது,​​ அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior